நாமக்கல் அண்ணா அரசு கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா
நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
நாமக்கல் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இயற்பியல் மன்ற துவக்க விழா மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் பங்காரு முன்னிலை வகித்தார். சென்னை லோகநாதா நாராயணா அரசுக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் தேவசங்கர் மற்றும் தர்மபுரம் ஞனாம்பிகை அரசு மகளிர் கல்லூரி பேராசிரியர் சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள்.
முதுகலை மாணவர் கோகுல் இயற்பியல் மன்ற பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு, எளிய சோதனை முறைகளில் இயற்பியல் கோட்பாடுகளின் செயல் விளக்கம் மற்றும் நானோ துகள்களின் அடிப்படை அறிவியல் என்கிற தலைப்பில் பயிற்சி அளித்தனர். முடிவில் மன்ற செயலாளர் ஜெயமுருகன் நன்றி கூறினார்.