நாமக்கல்லில் மாநில கூடைப்பந்து போட்டி; வெற்றிக்கனி பறித்த நாகர்கோவில் அணி

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் நடந்து வரும் மாநில கூடைப்பந்து போட்டியில், இன்று காலை நடைபெற்ற போட்டியில், சேலம் பார்க்ஸ் அணியை, நாகர்கோவில் ஏசியன் அணி வென்றது.

Update: 2023-02-03 05:15 GMT

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் நடந்து வரும் மாநில கூடைப்பந்து போட்டியில், இன்று காலை சேலம் பார்க்ஸ் அணியும், நாகர்கோவில் ஏசியன் அணியும் மோதின.

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பி.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 23வது, மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது.

இப்போட்டிகள், பகல் மற்றும் இரவு மின்னொளியில் நடக்கிறது. தமிழக கூடைப்பந்து கழக ஒப்புதலுடன் நடக்கும் இப்போட்டிகள், முதல் சுற்றில் 'நாக் அவுட்' முறையிலும், தொடர்ந்து, லீக் முறையிலும் நடக்கிறது. தமிழகத்தின் பிரபல அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில், ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 24 அணிகள், பெண்கள் பிரிவில் 11 அணிகள் என மொத்தம் 35 அணிகள் கலந்துகொள்கின்றன.

நேற்று மாலை நடந்த ஆண்களுக்கான போட்டியில், சென்னை ஜேப்பியார் அணியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணிகளும் மோதின. இதில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணியினர் ஒரு புள்ளி அதிகம் பெற்று வெற்றிபெற்றனர். இன்று 3ம் தேதி காலை நடைபெற்ற மூன்றாம் நாள் போட்டியில், சேலம் பார்க்ஸ் அணியும், நாகர்கோவில் ஆசியன் அணிகளும் மோதின. இதில் நாகர்கோவில் ஆசியன் அணி 39:30 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது. வரும் 5ம் தேதி வரை, பகல் மற்றும் இரவு நேரங்களில், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பி.ஆர்.டி., ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பரந்தாமன், நாமக்கல் கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News