டன் ஒன்றுக்கு ரூ. 500 சிறப்பு ஊக்கத்தொகை; கரும்பு உற்பத்தியாளர்களுக்கு வழங்க கோரிக்கை

namakkal news, namakkal news today- மத்திய அறிவித்துள்ள கூடுதல் விலையில் இருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு, 195 ரூபாய் வழங்கியது. அதை வரும் அரவை பருவத்துக்கு, ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-18 11:30 GMT

namakkal news, namakkal news today- மத்திய அறிவித்துள்ள கூடுதல் விலையில் இருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு,  ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க கரும்பு விவசாயிகள் கோரிக்கை (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- நாமக்கல் மாவட்டம், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர் நவலடி, கரும்பு பெருக்க அலுவலர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது,

முடிந்த அரவை பருவத்தில், 1.94 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. அதன் மூலம், 8.72 சதவீதம் சராசரி சர்க்கரை கட்டுமானம் பெறப்பட்டது. 2022 டிச. 31 வரை, கரும்பு சப்ளை செய்த விவசாயிகள் அனைவருக்கும், நிலுவையின்றி கரும்புக்கான கொள்முதல் விலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த, ஜன., பிப்., மாதத்தில் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு ரூ. 2,000 வீதம் ன்பணம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள, ரூ. 821.25, இம்மாதம் இறுதிக்குள் வழங்கப்படும். வரும், 2023–24ம் அரவை பருத்தில், 2.20 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, இதுவரை, 3,500 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,000 ஏக்கர் கரும்பு பதிவாகம் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறினார்.

தொடர்ந்து, மத்திய அறிவித்துள்ள கரும்புக்கான கூடுதல் விலையில் இருந்து, மாநில அரசு சிறப்பு ஊக்கத்தொகை, டன் ஒன்றுக்கு ரூ. 195 வழங்கியது. அதை வரும் அரவை பருவத்துக்கு ரூ. 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். நடவு மானியம், நான்கு அடி பாருக்கு, இயந்திரம் மூலம் அறுவடை செய்வதற்கு, ஏக்கருக்கு ரூ. 8,500 வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி அமைத்து, சாதாரண நடவுக்கும், ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும்.

வரும் அரவை பருவத்தில், வெட்டுக்கூலியை நிர்ணயம் செய்வதற்கு, விவசாயிகள், ஆலை நிர்வாகம், இயந்திர உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கரும்பு விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது.

மேலும், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், இணை மின் உற்பத்தி திட்ட பணிகளை மீண்டும் துவக்கியுள்ள, தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஆலையின் துணை தலைவர்கள் சந்திரசேகர், செங்குட்டுவன், தொழிலாளர் நல அலுவலர் தியாகராஜ், விவசாய சங்க பிரதிநிதிகள் வரதராஜன், குப்புராஜ், மணிவண்ணன், எட்டிக்கன் உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News