நாமக்கல் மாவட்ட புதிய பிஆர்ஓ.,வாக இளங்கோவன் இன்று பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இளங்கோவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ.,வாக பணியாற்றி வந்த சீனிவாசன் இடமாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக இளங்கோவன் நாமக்கல் மாவட்ட பிஆர்ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இவர் ஏற்கெனவே கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பிஆர்ஓ.,வாக பணியாற்றியுள்ளார்.