நாமக்கல்லில் அக்.4ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற அக்.4ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருகிற அக்.4ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுவார். பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை எழுத்து வடிவில், இரண்டு பிரதிகள் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.