பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கு தோல்வியா? பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பதிலடி

சட்டசபை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக தோல்வியடைந்தது என்று மு ன்னாள் அமைச்சர் சண்முகம் கூறியிருப்பது, அவருடைய தனிப்பட்டகருத்து என்று பாஜ எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி கூறினார்.

Update: 2021-07-08 01:44 GMT

மொடக்குறிச்சி சட்சசபை தொகுதி பாரதிய ஜனதா எம்.எல்.ஏ டாக்டர் சரஸ்வதி நாமக்கல்லுக்கு வருகை தந்தார். நாமக்கல்லில் உள்ள ஸ்ரீ நரசிம்மர், நாமகிரி அம்மன், ஆஞ்சநேயர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற 4 பாஜக எம்எல்ஏக்களும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தோம். அப்போது அனைத்து எம்எல்ஏக்களின் கோரிக்கைகளையும் அவர் தனித்தனியாக கேட்டறிந்தார். குடிநீர் பிரச்சனையை தீர்க்க காவேரி - கோதாவரி நதி நீர் இணைப்பு குறித்த கோரிக்கையை அனைவரும் வலியுறுத்தினோம். இரு நதிகளையும் இணைத்தால் பொதுமக்களும், விவசாயிகளுக்கும் எந்த அளவில் பயன் கிடைக்கும் என்பதை அவர் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிமுக தலைமை இது குறித்து கருத்து எதுவும் கூறவில்லை. தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் அதன் விலை குறைந்து பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News