மோகனூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

மோகனூர் அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

Update: 2024-01-14 01:45 GMT

மோகனூர் அருகே மல்லுமாச்சம்பட்டியில், புதிய ரேஷன் கடையை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், பரளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மல்லுமாச்சம்பட்டி கிராமத்தில், 196 குடும்பங்களுக்காக, புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா மறற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

மோகனூர் ஒன்றிய திமுக செயலாளர் நவலடி தலைமை வகித்தார். மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம் முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ. 1,000 ரொக்கப்பணம் வழங்கினார். விழாõவில், அப்பகுதியில் உள்ள தூய்மைப்பணியாளர்களின் சேவையை பாராட்டி அவர் பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு, மோகனூர் ஒன்றிய குழுத் தலைவர் சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவர் அருக்காணி, தாசில்தார் மணிகண்டன், பிடிஓ முனியப்பன், ஒன்றிய கவுன்சிலர் வேலுபாலாஜி, திமுக பொதுக்குழு உறுப்பினர் பூவராகவன், அரசு வக்கீல் முத்துசாமி, திமுக கிளை செயலாளர்கள் பொன்னரசு, கவுரிசங்கர், சரவணன், முருகேசன், பசுபதி மற்றும் ராமலிங்கம் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News