நாமக்கல் மாவட்டத்தில் இன்று 20ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 20ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-01-29 01:30 GMT

நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 14,64,300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி (83.49 சதவீதம்) 12,22,501 நபர்களுக்கும் (முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2,41,799), இரண்டாம் தவணை தடுப்பூசி (57.52சதவீதம்) 8,42,291 நபர்களுக்கும் (இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 2,72,850) செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடந்த 19 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 7,13,216 பேர் தடுப்பூசி செலுத்தி பயன் பெற்றனர்.

இன்று 29ம் தேதி சனிக்கிழமை, 20ம் கட்டமாக அனைத்து கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்துமையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 447 நிலையான முகாம்கள் மூலமாகவும் 31 நடமாடும் குழுக்கள் மூலமாக, மொத்தம் 478 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

அதன்படி, இன்று காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை கொரோனா நோய் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூட போடாதவர்களும், முதலாம் தவணை முடித்து, இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News