நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2021-12-30 01:45 GMT

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்,   வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும்.

இவ்வாரத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (31ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டு நேரில் தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சிபெறாதவர், 12ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் கம்ப்யூட்டர் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித்தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் வழங்கும் இலவச திறன்பயிற்சிகளில் சேர பதிவும் ஆலோசனையும் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைவரும்,  நாளை 31ம் தேதி வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு,  நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News