முப்படைத் தளபதி பிபின் ராவத் மறைவிற்கு கொமதேக சார்பில் வீர வணக்கம்

நாமக்கல் மாவட்ட கொமதேக அலுவலகத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி வீர வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-12-10 03:30 GMT

நாமக்கல் மாவட்ட கொமதேக அலுவலகத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி நடைபெற்ற வீர வணக்கம் நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததற்கு, நாமக்கல் மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கலந்துகொண்டு, ராணுவ தளபதி பிபின் ராவத்தின் உருவப்படத்திற்கு மலூர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் மணி, இணைச்செயலாளர் ராஜசேகர், தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், வர்த்தகர் அணி செயலாளர் குரு இளங்கோ உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News