நாமக்கல்லில் விவசாயிகள், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2023-01-25 10:45 GMT

நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மற்றும் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வேர் குறைதீர் கூட்டம், வருகிற 31ம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலவலகத்தில் நடைபெறுகிறது. டிஆர்ஓ மணிமேகலை தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், சமையல் கேஸ் கம்பெனி அலுவலர்கள், சமையல் எரிவாயு ஏஜென்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு சமையல் எரிவாயு விநியோகம் சம்மந்தமான குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News