ஈரோடு தொகுதி பொதுப் பார்வையாளர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

ஈரோடு தொகுதி தேர்தல் கமிஷன் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார்

Update: 2024-04-09 00:45 GMT

ஈரோடு தொகுதி தேர்தல் கமிஷன் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, நாமக்கல் ஆட்சியர் உமாவுடன் ஆலோசனை நடத்தினார். அருகில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், குமாரபாளையம் சட்டசபை தொகுதி, ஈரோடு பாராளுமன்ற தொதியின் கீழ் உள்ளது. இதையொட்டி, ஈரோடு தொகுதிக்கான தேர்தல் கமிஷன் பொதுப் பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா நாமக்கல் வந்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ராஜேஷ்கண்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப்போடுவதை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை முறையாக கண்காணிக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், குமாரபாளையம் சட்டசபை தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் விழிப்புணர்வு பணிகள், சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

Similar News