நாமக்கல்: வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-13 12:15 GMT

நாமக்கல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில்,  கோரிக்கை மனு அளித்த பயனாளிகளுக்கு, வீட்டு மனைப்பட்டாவை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். அருகில் டிஆர்ஓ துர்காமூர்த்தி.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,  வீடியோ கான்பரன்சிங் மூலம், மக்கள் குறைத்தீர் கூட்டம் நடைபெற்றது. டிஆர்ஓ துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து,  வீடியோ கான்பரன்சிங் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். 8 தாசில்தார் அலுவலகங்கள், 15 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், 5 நகராட்சி அலுவலகங்கள், 19 டவுன் பஞ்சாயத்து அலுவலகங்கள் என மொத்தம் 47 இடங்களில் இருந்து 23 மனுதாரர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல், வாரிசுச்சான்றிதழ், வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அரசுத்துறை அலுவலர்களிடம் வழங்கினார்கள். அனைத்து துறை அலுவலர்கள் தங்கள் அலுவலகங்களில் இருந்து வீடியோ கான்பரன்ங்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் வரப்பெற்ற மனுக்களின் அடிப்படையில் 8 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா பெறுவதற்கான உத்தரவுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்டம் சப் கலெக்டர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News