நாமக்கல்லில் வரும் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-09-26 11:30 GMT

பைல் படம்

நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செப்டம்பர் மாதத்திற்கான, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 30ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்த பயன்பெறலாம் எ ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News