புதுச்சத்திரம் பகுதியில் விவசாயிகளுக்கு பயிர் கடன்: எம்எல்ஏ வழங்கல்
புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 10 விவசாயிகளுக்கு பயிர்கடன் உதவிகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ராமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டி சார்பில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 10 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 11 ஆயிரம் பயிர் கடன் வழங்கினார். சங்க செயலாளர் மாதையன், கூட்டுறவு சார்பதிவாளர் சசிகலா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராம்குமார், பாச்சல் பஞ்சாயத்து தலைவர் சண்முகம், திமுக புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.