நாமக்கல், திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் பருத்தி ஏல விற்பனை

நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டிகளில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-02-16 03:00 GMT

மாதிரி படம் 

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் (என்சிஎம்எஸ்) வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், திருச்செங்கோடு, கரூர், திண்டுக்கல், அவினாசி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 869 முதல் ரூ.11 ஆயிரத்து 869 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.10 ஆயிரத்து 269 முதல் ரூ.13 ஆயிரத்து 222 வரையிலும், கொட்டு ரக பருத்தி ரூ.4 ஆயிரத்து 99 முதல் ரூ.7 ஆயிரத்து 700 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.46 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொøசைட்டியில் (டிசிஎம்எஸ்) நடைபெற்ற பருத்தி ஏலத்தில், பி.டி. ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 479 முதல் ரூ.10 ஆயிரத்து 662 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 879 முதல் ரூ.13 ஆயிரத்து 879 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News