நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பில் பருத்தி ஏலம் போனது.

Update: 2022-03-02 08:00 GMT

கோப்பு படம் 

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் (என்சிஎம்எஸ்) வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெறும். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு நாமக்கல், புதுச்சத்திரம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 4,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். திருச்செங்கோடு, கொங்கனாபுரம், ஈரோடு, அவினாசி, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில் மொத்தம் ரூ.1.50 மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெற்றது. ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்து 520 முதல் ரூ.10 ஆயிரத்து 299 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.10 ஆயிரத்து 276 முதல் ரூ.12 ஆயிரத்து 222 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 666 முதல் ரூ.7 ஆயிரத்து 299 வரையிலும் ஏலம் போனது.

Tags:    

Similar News