நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

Update: 2022-03-08 00:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 67,989 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று, 10 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 67,412 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று, கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ளது.

Tags:    

Similar News