கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்

பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 938 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

Update: 2022-08-10 07:00 GMT

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் மெகா கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கொங்குநாடு இன்ஜி. கல்லூரியில்

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளூர்ப்பட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் மெகா கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

கொங்குநாடு கல்வி நிறுவன வளாகத்தில், நடைபெற்ற மெகா கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாமிற்கு, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அசோகன் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை, பி.எட் கல்லூரி முதல்வர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், காட்டுப்புத்தூர் மற்றும் மேய்க்கல்நாய்க்கன்பட்டி ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 938 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மோகன்ராஜ், கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News