ஆண்களுக்கு நவீன கருத்தடை: விழிப்புணர்வு வாகனம் துவக்கிவைப்பு

நாமக்கல்லில், ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-11-25 02:00 GMT

நாமக்கல்லில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை பிரச்சார வாகனத்தை, கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறையின் சார்பில், நவ. 21 முதல் டிச.4 வரை ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை,  இருவார விழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்காக விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம்,  நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று, பொதுமக்களுக்களிடம், தகுதி வாய்ந்த தம்பதியினர், ஆண்களிடம் தழும்பில்லாத நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடும்.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு, பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News