கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை ஒப்படைக்க அங்கன்வாடி பணியாளர்கள் முடிவு

Live Protest Today - நாமக்கல் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை ஒப்படைக்க அங்கன்வாடி பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-06-27 03:04 GMT

நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Live Protest Today - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஜெயக்கொடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வருகிற 29-ந் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் ஒப்படைப்பது, 30-ந் தேதி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது, காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்துவது, அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க கோருவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரேமா, பொருளாளர் கலா உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News