புதுச்சத்திரம் அருகே கார் விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி பலி

புதுச்சத்திரம் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர். 2 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.

Update: 2022-02-21 00:00 GMT

பைல் படம்.

சேலம் தாதகாப்பட்டி, வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (34). தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்செல்வி (30). இவர்களுக்கு அக்ஷயா (7), பிரகதி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில், நாமக்கல் மாவட்டம், களங்காணியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்தனர்.

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பாச்சல் மேம்பாலத்தில் சென்றபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில்,  செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்தவர்கள், தமிழ்செல்வனையும் குழந்தைகளையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் அக்ஷயா, பிரகதி ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News