நாமக்கல்லில் 75ம் ஆண்டு சுதந்திர தினவிழா நினைவுப் பாதயாத்திரை

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், 75ம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு பாத யாத்திரை துவக்க விழா நடைபெற்றது.

Update: 2022-08-09 13:15 GMT

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 75ம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு, மோகனூரில் பாத யாத்திரை துவங்கியது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75வது சுதந்திர தினம் மற்றும் ஆக.9 வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு பாத யாத்திரை துவக்க விழா மோகனூரின் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, காந்தி, காமராஜர், இந்திரா காந்தி கிலைகளுக்கு மாலை அணிவித்து பாதயாத்திரையை துவக்கி வைத்தார். மோனூர் நகர காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், புதுச்சத்திரம் சக்திவேல், நாமக்கல் ரகுமேகநாதன் மற்றும் வையாபுரி, கண்ணியம்மாள், சரசு உள்ளிட்ட பலர் பாதயாத்திரையில் கலந்துகொண்டனர்.

அனைத்து ஒன்றியம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நடைபயணம் வருகிற 14ம் தேதி நாமக்கல்லில் நிறைவு பெறும். 15ம் தேதி 75வது ஆண்டு சுதந்திர தின விழா காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News