75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

Update: 2022-08-09 11:00 GMT

சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி நாமக்கல்லில் தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்தியாவின், 75வது சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகரில் தபால் துறையின் சார்பில் பேரணி நடைபெற்றது. நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். அனைத்து தபால்துறை ஊழியர்களும் தேசியக் கொடியை கையில் ஏந்தி இந்த பேரணியில் கலந்துகொண்டனர். நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, ச.பே.புதூர், உழவர் சந்தை, பஸ் நிலையம், திருச்சி ரோடு வழியாக மீண்டும் தலைமை தபால் அலுவலகத்தை அடைந்தது.

இந்த பேரணியில் உதவி கண்காணிப்பாளர் அண்ணாமலை, அஞ்சல் ஆய்வாளர்கள் கோபிநாத், கார்த்திகேயன் அஞ்சலக ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வணிக வளர்ச்சி அலவலர் சங்கர் உள்ளிட்ட திரளான தபால்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News