காதலிப்பதாக கூறி சிறுமிக்கு தொல்லை..!
காதலிப்பதாக கூறி சிறுமிக்கு தொல்லை.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;
பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி, பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். அப்போது, எங்கள் பகுதியைச் சேர்ந்த எனது மகளுக்கு அண்ணன் முறை கொண்ட கண்ணன்(32) என்பவர், என் மகளை பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்தார்.
ஆசை வார்த்தைகளால் ஏமாற்றி
மேலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வந்தார். இதனையறிந்த நான், எனது மகளை உறவினர் வீட்டில் விட்டிருந்தேன்.
விஷம் குடித்த பெண்
இதனால் மனமுடைந்த எனது மகள், கடந்த 30ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால் உயிர் பிழைத்தார்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
மைனர் பெண்ணான எனது மகளுக்கு காதலிப்பதாக கூறி தொல்லை கொடுக்கும் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டது. இதையடுத்து, கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவான நபரை தேடும் போலீசார்
தற்போது தலைமறைவாகியுள்ள கண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.