குமாரபாளையம் ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க தேடுதல் வேட்டை

Namakkal News Today -குமாரபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை, மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-09-22 01:51 GMT

குமாரபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை, மீட்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Namakkal News Today -குமாரபாளையம் கத்தேரி பிரிவு அருகே காட்டெருமை மேய்வதை கண்ட பொதுமக்கள் சிலர் அச்சத்தில் அங்கிருந்து விலகி சென்றனர். இது குறித்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. நேரில் வந்த இவர்கள் டீச்சர்ஸ் காலனி, சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எருமையை பார்த்ததாக பலர் கூறியதால் அப்பகுதியில் இரவிலும் தேடி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் வர பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். சமீபத்தில் காவிரியில் வெள்ளம் வந்த போது பள்ளிபாளையத்தில் முதலை வந்தது போல், இந்த எருமை அடித்து வரப்பட்டதா? எனவும் பேசி வருகின்றனர்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News