வாடிப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சிற்கு வரவேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-21 11:18 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் சோலைராஜா இல்ல திருமண விழாவில் பங்கேற்க வருகை புரிந்த, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வாடிப்பட்டி அருகே மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் வரவேற்பு கொடுத்தனர்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அலங்காநல்லூர், ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றம் வாடிப்பட்டி சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News