விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆட்சியாளர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி, மத்திய அரசைக் கண்டித்து, மதுரை ஆட்சியாளர் அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை முன்பு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஏராளமான ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர்.