நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு விறு...விறு...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விருப்ப மனுக்களை அளித்தனர்.

Update: 2021-11-29 17:00 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளிக்கும் அதிமுகவினர்.

கரூர் மாவட்டத்தில்,  ஒரு மாநகராட்சி 3 நகராட்சி, 8 பேரூராட்சிகள் உள்ளன. கரூரில் உள்ள இரண்டு நகராட்சி பகுதிகளில் 2,08,632 வாக்காளராக உள்ளனர். எட்டு பேரூராட்சி பகுதிகளில் 75,987 வாக்காளர்கள் உள்ளனர். இதனையடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனு பெரும் நிகழ்வு அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளர்  சின்னசாமி, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பெறப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் விருப்ப மனு கொடுத்தனர். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News