டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூரில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-10 10:00 GMT

சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கரூர் ஆர்.எம்.எஸ் போஸ்ட் ஆபீஸ் அருகில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் மாநிலம் தழுவிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் கடை ஊழியர்களுக்கு சுழற்சிமுறை பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி அமல்படுத்த  வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாட்டு செலவின தொகையை முழுமையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சம்ளேனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News