கரூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற நபரை போலீஸார் கைது செய்தனர்
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்களை, பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்த நபரை கைது செய்தனர்
கரூரில் குட்கா பொருட்களை விற்றதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் கஸ்தூரி உள்ளிட்ட போலீசார், மனோகரா கார்னர் பகுதியில் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்களை, பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்ததாக கரூர் காமராஜர்புரத்தை சேர்ந்த நாச்சிமுத்து( 42,) என்பவரை, கரூர் டவுன் போலீஸார் கைது செய்தனர்