கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபு சங்கர் பொறுப்பேற்பு

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபு சங்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

Update: 2021-06-16 13:05 GMT

கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக பிரபு சங்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர் இன்று பொறுப்பேற்றார்.

சென்னை மெட்ரோ வாட்டர் செயல் இயக்குநராக பதவி வகித்த இவர் பணியிட மாறுதலில் .தற்போது கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்த இவர், சண்டிகரில் மருத்துவ முதுநிலை முடித்தார்.   சென்னையில் மருத்துவராக பணிபுரிந்துகொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி அதில் அகில இந்திய அளவில் 7 வது தரவரிசையில் வெற்றி பெற்றார்.

 பயிற்சியின்போது, உத்தரகாண்ட் மாநில முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சிமையத்தில் சிறந்த பயிற்சி அதிகாரியாக தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சார் ஆட்சியராக செஞ்சியில் பொறுப்பேற்றவுடன் இருளர் பழங்குடியினருக்காக அமைக்கப்பட்ட நிலையான நீடித்த வளர்ச்சிக்கான நவீன கட்டமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் காலனியை உருவாக்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர்.

Tags:    

Similar News