தொடர் மழையால் இடிந்தது விழுந்த வீடுகள்

50 ஆண்டு பழமையான வீடு தொடர் மழையால் இடிந்தது. மாடியில் தங்கி இருந்த இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

Update: 2021-11-22 17:45 GMT

மழையால் வீட்டின் முன்பக்கம் இடிந்து விழுந்தது


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை பகுதியில் 50 ஆண்டு பழமையான மாடி வீட்டில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த தேவா, ராஜு, குமார் ஆகிய மூன்று நபர்கள் தங்கி கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகின்றனர். மாடியில் உள்ள மூன்று அறைகளில், ஒன்றில் ராஜு மற்றும் குமார் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பழமையான மாடிக்கட்டிடம் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பக்க அறை மாடிப்படியுடன் இடிந்து விழுந்தது.  இதனால், மாடி அறையில் தங்கியிருந்த இருவரும் வெளியேற முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு நபர்களையும் ஏணிப்படி உதவியுடன் மீட்டனர். 

Tags:    

Similar News