கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-03 04:30 GMT

 மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் கரூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை லேசாக பெய்த்து. நேற்று இரவு முழுவதும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையிலிருந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பஞ்சப்பட்டி யில் அதிகபட்சமாக 75 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி. மீ வருமாறு கரூர் 11.4, அரவக்குறிச்சி 29.6, அணைப்பாளையம் 56, க பரமத்தி 9.2, குளித்தலை 31, தோகமலை 40, கிருஷ்ணராயபுரம் 40, மாயனூர் 35, பஞ்சப்பட்டி 75, கடவூர் 42.6, பாலவிடுதி 70.1 மைலம்பட்டி 50.மொத்தம் 496.9. சராசரி 41.

Tags:    

Similar News