பஞ்சாயத்து அலுவலகத்தில் திமுக பிரமுகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததால் சர்ச்சை

அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பி.பி கந்தசாமி என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Update: 2022-01-26 10:45 GMT

திமுக பிரமுகர் பி.பி கந்தசாமி. 

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, காதப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவரின் அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பஞ்சாயத்து தலைவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. பஞ்சாயத்து செயலாளர் இருப்பினும் குடியரசு தினமான இன்று தேசியக் கொடியை  அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பி.பி கந்தசாமி என்பவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தேசியக்கொடியை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில், கட்சிப் பிரமுகர்கள், கட்சி அலுவலகத்தில் ஏற்றலாம். இந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுப்பாட்டிலும், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், உள்ள நிலையில், இதுபோன்ற செயல் திமுகவினரின் அத்துமீறல் என்று கூறப்படுகிறது. பஞ்சாயத்து செயலாளர், ஊராட்சி ஒன்றிய பிடிஓ ஆகியோர்கள் இருக்கும் நிலையில், திமுக நிர்வாகி தேசியக் கொடியை ஏற்றி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News