அண்ணா பிறந்த நாள்விழா: திமுக மரியாதை
அண்ணா பிறந்த நாளையொட்டி கரூரில் அண்ணா சிலைக்கு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
கரூரில், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கரூர் மாவட்ட திமுக சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு, கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.