அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விசிக கோரிக்கை

ஒலிமுகமதுபேட்டை மின்சார வாரிய அலுவலகம் முன்பும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காவிதுண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-08-12 10:15 GMT

காஞ்சிபுரம் அடுத்த ஒலி முகமது பேட்டை பகுதியில் அமைந்துள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் முன்பு அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டபோது.

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை பகுதியில் மின்சார வாரிய அலுவலகம் வளாக நுழைவு வாயிலில்  அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது.மர்ம நபர்கள் இன்று காலை இச்சிலைக்கு  காவி துண்டு அணிவித்து சென்றுள்ளனர்

அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த மர்ம நபரை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காஞ்சிபுரம் - வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த டிஎஸ்பி காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு அணிந்த நபரை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று தரப்பினர் காவல் துறையிடம் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளனர். அம்பேத்கர் சிலை மீது போடப்பட்ட காவி துண்டை காவல்துறை அகற்றிவிட்டு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காஞ்சிபுரத்தில் அம்பேத்கர் சிலை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.


Tags:    

Similar News