வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ கச்சபேஸ்வரர்...!

கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கச்சிபேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 16ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-04-25 16:45 GMT

வெள்ளித்  தேர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

காஞ்சி ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் வெள்ளித்தேரில் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சேபேஸ்வரர் வீதி உலா வந்தார்.30 நிமிட தொடர் கண் கவர் வாணவேடிக்கை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து கண்டு ரசித்தனர்.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திருத்தலங்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. அதில் தலை சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்வு காணும் பரிகாரம் தலமாக விளங்கும் ஸ்ரீ சுந்தராம்பிகை உடனுறை ஸ்ரீ கச்சபேஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலின் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் ஸ்ரீகச்சபேஸ்வரர் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.


அவ்வகையில் இன்று பத்தாம் நாள் இரவு உற்சவத்தில் ஸ்ரீ சுந்தராம்பிகை , ஸ்ரீ கச்சபேஸ்வரர் வெள்ளித்தேரில் ராஜகோபுரம் அருகே சிவ, கைலாய வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து 30 நிமிட வாண வேடிக்கை நிகழ்வு தொடங்கி தொடர்ச்சியாக பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் வான வேடிக்கை நடைபெற்றது.

இதனைக் காண காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து வெள்ளித்தேர் மற்றும் வானவேடிக்கை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News