உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!

காஞ்சிபுரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமணத்திற்கு வருகை புரிந்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

Update: 2024-04-26 12:15 GMT

அமைச்சர் ஜெயக்குமாரின் செய்தியாளர் சந்திப்பின்போது

உள்துறையில் கையில் வைத்துக்கொண்டு வேங்கைவயல் சம்பவத்தை போல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது அத்துறைக்கு ஸ்டாலின் தகுதி அற்றவர் என்பதை நிரூபிக்கிறது.. காஞ்சிபுரத்தில் ஜெயக்குமார் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பிரமுகர் இல்ல திருமணம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் போதை பொருளின் ஹப்பாக (HUB) விளங்குகிறது எனவும் , வேங்கை வயல் சம்பவம் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததும், விஞ்ஞான வளர்ச்சி உள்ள நிலையில் இது போன்ற சம்பவங்களை ஆரம்பத்திலேயே ஒடுக்கி இருக்க வேண்டும் எனவும், உள்துறை அமைச்சர் பதவியை வைத்துள்ள ஸ்டாலின் இதனை கண்டு கொள்ளாததும், இதன் தொடர்ச்சியை பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே முதல்வர் உள்துறை அமைச்சர் பதவி வைத்திருப்பதற்கு தகுதியற்றவர் என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் திருமண வீட்டார் என பல உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மாங்காடு ஆகிய பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் கோடை காலத்தின் முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் பழங்கள் என அனைத்தும் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News