லாரி மோதியதில் சாலையோரமாக நடந்து சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு

லாரி மோதியதால் காஞ்சிபுரம் அடுத்த காரப்பேட்டை அருகே நெடுஞ்சாலையில் நடந்து சென்ற இரு பெண்கள் உயிரிழப்பு

Update: 2021-11-27 16:30 GMT

விபத்து - கோப்பு படம் 

சென்னை - பெங்களூரு  தேசிய நெடுஞ்சாலையில்  காஞ்சிபுரம் அடுத்த  செட்டியார் பேட்டை அருகே உள்ள கேஎப்சி  சிக்கன் கடை எதிரே  இரவு 8 மணியளவில்  சின்ன காஞ்சிபுரம் , நாகலூத்துமேடு பகுதியை சேர்ந்த  சங்கீதா  மற்றும் நீலவேணி ஆகியோர் சென்னை மார்க்கமாக நடந்து சென்ற போது,  வேலூரில் இருந்து வந்த  லாரி  இருவர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி சென்று விட்டனர் .

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சி தாலுகா போலீசார் பிரேதத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள்  மீது லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News