இந்த மாசம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடை லீவுவாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், வள்ளலார் நினைவு நாள், குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்கள் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Update: 2022-01-13 09:24 GMT

டாஸ்மாக் கடை பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989 விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து,

1. 15.01.2022 (சனிக் கிழமை) திருவள்ளூவர் தினம்,

2. 18.01.2022 (செவ்வாய் கிழமை) வள்ளலார் நினைவு நாள்,

3. 26.01.2022 (புதன் கிழமை) குடியரசு தினம்

எனவே, மேற்படி நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News