மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட் !!

வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

Update: 2022-05-23 05:30 GMT

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி , வருவாய்த்துறை,  ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளிப்பது வழக்கம்.

இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் விசாரணை மேற்கொண்டு நிவாரணம் காணுவது வழக்கம். இன்று வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெறும் வேளாண்துறை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.

மேலும் இக்கூட்டத்திற்கு காலை 10 மணிக்கு மாவட்ட துறை அலுவலர்கள் அனைவரும் வருகை புரியும் நிலையில் இன்று பெரும்பாலான அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்கள் அளிக்கும் மனு பரிந்துரை செய்து உரிய அலுவலர் ஒலி பெருக்கி அழைக்கும் போது பல அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவில்லை என்பதை தெரியவந்தது. இச்செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News