மாரியம்மன், வேணுகோபால் சுவாமி கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் திருக்கோயில் மற்றும் குன்றத்தூர் வேணுகோபாலசாமி திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-12-05 10:45 GMT

காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குள தெற்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ குளக்கரை மாரியம்மன் கோயில் மூலவர் கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றி பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.  

கோயில் நகரமாக காஞ்சிபுரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு திருக்கோயில்களுக்கு வந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு பழைய கோயில்கள் தற்போது பக்தர்களால் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் சர்வதீர்த்த குளக்கரை தெற்கே பிரிவில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு குளக்கரை மாரியம்மன் ஆலயம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு  கும்பாபிஷேக பணிகள் துவக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணபதி பூஜை உடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது. சிவாச்சாரியார் அவர்களால் புனித கலசங்கள் நேர் நிறுத்தி நான்கு கால பூஜை விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை நான்காவது கால பூஜை நிறைவு பெற்று புனித கலசங்கள் கூறப்பட்டு ஆலயத்தை வளம் வந்தபின் மூலவர் சன்னதிக்கு, கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு வேதவிற்பனர்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு புத்தர்களுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது.

இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானங்கள் மற்றும் கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் , குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் அருள்மிகு ராதா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி திருக்கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் கடந்த சில ஆண்டுகளாக புனரமைக்கும் பணி நடந்து வந்தது.

தற்போது கோவில் புனரமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகளுடன் யாகசாலைகள் வளர்க்கப்பட்டு துரைராஜ் பட்டாச்சாரியார்கள் கலசங்களில் இருந்த புனித நீரை கோவில் கோபுரத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதே போல் நேற்று பிள்ளையார்பாளையம் செங்குந்தர் நகரில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ சக்தி விநாயக திருக்கோயில் நான்கு கால பூஜைகளுக்கு பிறகு காலை 9 மணி அளவில் கலசங்கள் புறப்பாட செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

இதில் கலந்து கண்ட பக்தர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சண்மூகானந்தம் அன்ன பிரபு பிரசாதங்களை வழங்கினர்.

Tags:    

Similar News