காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழா: பொதுமக்கள் தரிசனத்திற்கு தடை
காஞ்சிபுரம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பொது மக்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கூறியதாவது :
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து நீடித்து வருவதாலும் இத்திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப் படுவதால், கொரோனா நோய் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ள காரணத்தினாலும், பொதுமக்களின் நலன் கருதி, இத்திருக்கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா காஞ்சிபுரம் அறிவுறுத்தலின்படி, 13.01.2022 அன்று பொது மக்களின் தரிசனத்திற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலின் ஆகம விதிகளின் படியும், பழக்க வழக்கத்தின்படியும் சன்னதிக்குள்ளேயே பூஜைகள் மட்டும் நடைபெறும்.
எனவே பக்தர்கள் வைகுண்டஏகாதசி நேரலையை 13.01.2022 அன்று காலை 6.00 மணிமுதல் https://youtu.be/nBsmNh1gTjI என்ற இணையதள முகவரியில் கண்டு வைகுண்ட பெருமாள் திருவருளை பெற்றிடவும், இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிடுமாறும் திருக்கோயில் நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.