காஞ்சிபுரம் பிரம்மோற்சவ திருவிழா ஏற்பாடுகளை எஸ்.பி. சுதாகர் ஆய்வு

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-01 11:45 GMT

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் நடைபெறுவதையொட்டி காஞ்சி மாவட்ட எஸ்.பி. சுதாகர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு அதன்பின் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அக்குறிப்பில் காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சிபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன உட்கோட்டம். விஷ்ணுகாஞ்சி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் 28.05.2023 அன்று தொடங்கி  13 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடை பெற்று வருகிறது.

இதில் 02.06.2023 அன்று கருடசேவை திருவிழாவும்5-06.2023 அன்று திருத்தேர் உற்சவமும், (08.06.20023 அன்று தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது.


இத்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 4,00,000 பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தெரியவருகிறது. இத்திருவிழா சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்  தலைமையில் எஸ்.பி.சுதாகர்  முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள். துணை காவல் கண்காணிப்பாளர்கள். காவல்நிலைய ஆய்வாளர்கள் (சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து). இந்து சமீ அறநிலைத்துறை. கோயில் நிர்வாகிகள், மாநகராட்சி, தீயணைப்பு துறை சுகாதாரத்துறை போக்குவரத் னதுறை பொதுப்பணித்துறை. மின்சாராத் துறை உணவுப் பாதுகாப்புத் துறை. நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருடசேவை மற்றும் திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களில் மின்விபத்து ஏற்படாவண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல். மின்கசிவு ஏற்படாவண்ணம் பாதுகாத்தல் மற்றும் தேருக்கு இடையூராக உள்ள மின்சார ஒயர்களை முறைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இத்திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள். காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 1500 காவல்துறையினருடன் ஊர்க்காவல்படையினர். NCC/NSS மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்திருவிழா நாட்களில் குழந்தைகள் மற்றும் வயது  முதியோர்களை அழைத்துச் செல்பவர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல்துறை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் தேர் செல்லும் முக்கிய வீதிகளில் குடிநீர் தொட்டிகள். நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நகரின் முக்கிய ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையினர் வாகனத் தணிக்கையிலும் ,  நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உணவுப்  பாதுகாப்புத்துறை மற்றும் இந்து அறநிலையத் துறையிடம் அனுமதி பெற்ற பின்னரே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் மேற்படி அன்னதானம் வழங்கும் இடங்களில் மட்டுமே அன்னதானம் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருவிழா காலங்களில் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாமி ஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டு மாநகராட்சி சார்பில்  வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருவிழாக் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாற்று வழித்தடங்களை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருவிழா காலங்களில் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் சாமி ஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இத்திருவிழா நாட்களில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்திருவிழா நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதி்ல் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News