காஞ்சியில் தொற்று பாதிப்பு குறைந்து. இன்று 564 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று 564 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டு குறைந்துள்ளது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாகவே கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக அளவில் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 1089 பேர் பாதித்த நிலையில் இன்று 564 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்துளளதால் இதே நிலையை கடைப்பிடிக்க பொதுமக்கள் முயல வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளதுமேலும் சிகிச்சை முடிந்து இன்று அதிக அளவில் அதாவது 913 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர்
காஞ்சிபுரத்தில் 219 நபர்களும் , உத்திரமேரூரில் 81 நபர்களும். , ஸ்ரீபெரும்புதூரில் 231 நபர்கள் , மற்ற மாவட்டங்களை சேர்ந்த 33 பேர்கள் என மொத்தம் 564 பேர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.