தொழிலாளர் நலன் கருதி யமாஹா நிறுவனம் மே31வரை உற்பத்தி நிறுத்தம்..

கொரோனா பரவுவதை தவிர்க்க

Update: 2021-05-10 14:00 GMT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டத்திலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிய பல பகுதிகளிலிருந்து வருவதால் தொழிலாளர்களுக்கு‌ எளிதில் பரவவாய்ப்புள்ளது.

இந்நிலையில் ஒரகடம் பகுதியில் இயங்கிவரும் யமாஹா இருசக்கர வாகன உற்பத்தித் தொழிற்சாலை தொழிலாளர் நலன் கருதியும் ,  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் தனது தொழிற்சாலையில்  உற்பத்தியை மே 15 முதல் மே 31 வரை நிறுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிவதால் பரவல்  எளிதாகும் என்பதால் இதுபோன்று தொழிற்சாலைகள் குறுகிய காலத்தில் உற்பத்தி பணிகளை நிறுத்தினால் பரவல் கட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News