ஊத்துக்காடு இருளர் குடியிருப்பு பணிகளை ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 433 தொகுப்பு வீடுகள் 5 ஒன்றியங்களில் கட்டப்பட்டு வருகிறது.

Update: 2023-05-25 13:15 GMT

ஊத்துக்காடு பகுதியில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகள் மற்றும் சிங்காடிவாக்கத்தில் 100 குடியிருப்புகள், காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டு குளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகள், உத்திரமேரூர் ஒன்றியம் மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், திருப்பெரும்புதூர், காட்ரம்பாக்கத்தில் 31 குடியிருப்புகள் மொத்தம் 443 குடியிருப்புகள் 19 கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில் புதியதாக ஆட்சியராக பதவி ஏற்றுக்கொண்ட கலைச்செல்வி மோகன் இன்று காலை ஊத்துக்காடு பகுதியில் இருளர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளின் நிலை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பணிகளை விரைவாக முடித்து ஒப்படைக்கவும்,  அரசு விதிகளின்படி உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

ஏற்கனவே மலையாங்குளம் மற்றும் குண்டு குளம் பகுதியில் முழுமை அடைந்து ஐந்து சதவீத பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் அனைத்தும் இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமை பெறும் என தெரிய வருகிறது.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம், ஊராட்சி முகமை பொறியாளர் குழு மற்றும் ஒப்பந்ததாரர் என அனைவரும் உடன் இருந்தனர்.

கடந்த ஆட்சியராக இருந்த ஆர்த்தி இப்பணிகளை அப்போது பார்வையிட்ட போது பணிகள் முறையாக செய்யவில்லை என ஒப்பந்ததாரர் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளை மீண்டும் முறையாக செய்ய அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News