காஞ்சிபுரம் அருகே தென்னை தோப்பில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மரங்கள் சேதம்

காஞ்சிபுரம் அருகே தென்னை தோப்பில் தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்தன.

Update: 2022-08-13 11:00 GMT

காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை கிராமத்தில்  துரை என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தென்னை மரக்கன்றுகள் வைத்து பராமரித்து வருகிறார்.

தென்ன மரக் கன்றுகள் நடவு செய்துள்ள தோட்டத்தில் அதிக அளவு புல் பூண்டு வளர்ந்திருந்த நிலையில் இன்று வெயிலின்  தாக்கம் காரணமாக திடீரென  செடிகள் பற்றி எரிய தொடங்கி உள்ளது.

தோட்டத்தில் பணி செய்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் தீயை அணைக்க முயன்ற நிலையில்  காற்று வேக திசை காரணமாக தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில்  100க்கும் மேற்பட்ட தென்ன மரகன்றுங்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.

Tags:    

Similar News