வாலாஜாபாத் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை

வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2022-06-27 12:15 GMT

கொள்ளை நடந்த வீடு.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்க்காடு பகுதியில் தனது மனைவி கலைச்செல்வி மற்றும் மகளுடன்  வசித்து வருபவர் தனிகையரசு.

தனிகையரசு  ஒரடம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடக்கும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

திருமண நிகழ்வு நிறைவு பெற்று இன்று காலை 8 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன் கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் 25 சவரன் நகை, மற்றும்  ரூபாய் 3 லட்சம்  பணம் கொள்ளைை  போனது தெரியவந்தது.

இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News